கோப்புப் படம் 
தமிழ்நாடு

பெருந்துறை அருகே கீழ்பவானி பாசன வாய்க்காலில் மூழ்கி இருவர் பலி

பெருந்துறை அருகே கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற நான்கு பேரில், இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

DIN

பெருந்துறை: பெருந்துறை அருகே கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற நான்கு பேரில், இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஈரோடு  பெரியவலசு நான்குமுனைச் சாலைப் பகுதியை  சேர்ந்தவர் ராமசாமி மகன் குமாரசாமி (40), சென்னை  குரோம்பேட்டை சென்ட்ரல் பேங்க் காலனி தேவராஜ் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் தரணிகுமார் (39) மற்றும் இவர்களது நண்பர்கள், ஈரோட்டைச் சேர்ந்த கலையரசு, பிரகதீஸ்வரன் ஆகியோர் வியாழக்கிழமை நள்ளிரவில் ஈரோடு- பெருந்துறை  சாலையிலுள்ள வாய்க்கால்மேடு அருகே மது அருந்தி விட்டு, பின்னர் கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.  

நால்வரும் குளிக்கும் போது, இரண்டு பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.  இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில், குமாரசாமி உடல் இன்று மாலை  மீட்கப்பட்டது. தாரணி குமார் உடலை தேடி. வருகின்றனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT