தமிழ்நாடு

தருமபுரி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த யானை மீட்பு

DIN

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டு சிகரஹள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தவறி விழுந்தது.

இந்த யானையை இரவு முழுவதும் பாலக்கோடு மற்றும் ராயக்கோட்டை வனத்துறையினர் ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் கொண்டு சாய்தளம் அமைத்துப் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோடைக் காலம் தொடங்கி உடன் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் கிராமப்புறங்களுக்கு நுழையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமப்புறங்களுக்கு இரவு நேரங்களில் வந்து செல்கின்றது. இதில் இரண்டு யானைகள் பிரிந்து பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாகச் சுற்றித்திரிந்து, விவசாய நிலங்களில் நுழைந்து கரும்பு, நெல் போன்ற பயிர்களைச் சேதப்படுத்தி  வருகிறது.

தொடர்ந்து நேற்று காரிமங்கலம் அடுத்த காட்டு சிகரஹல்லி பகுதிக்கு உணவு தேடி வந்த 2 யானைகளில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, சக்திவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனைத்தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அருகிலுள்ள ராயக்கோட்டை வனத்துறையினர் இணைந்து ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் நேற்று இரவு முதல் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விவசாய நிலத்திலிருந்து கிணற்றுக்கு சாய்தளம் அமைத்து இன்று அதிகாலை யானையைப் பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள வனப் பகுதிக்குள் விடுவித்தனர். தொடர்ந்து  உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க வனத்துறையில் உள்ள குளங்களில் நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT