தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு: விஜயபாஸ்கர்

DIN


சென்னை: தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஆறு பேருக்குமே தமிழகத்தில் தொற்று பரவவில்லை. ஆறு பேருமே கரோனா பாதித்த நாடுகளில் இருந்து பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குள் வந்தவர்கள். 

மேலும், அனைத்து துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், தமிழக எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT