கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமையில் வைப்பு
கும்பகோணம்: கும்பகோணத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடுகரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமையில் வைப்பு
கும்பகோணம்: கும்பகோணத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் மேற்கிந்திய தீவுகளிலிருந்து வந்தவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகப் பரிசோதனையில் சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, அவர் சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு 5 செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
எனவே, 5 செவிலியர்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கரோனாவால் பாதிப்புக்குள்ளான கும்பகோணத்தைச் சேர்ந்தவரின் மனைவி மற்றும் சகோதரர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதேபோல, பாதிக்கப்பட்டவர் வசித்து வரும் தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு சளி, இருமல், காய்ச்சல் சில நாட்களாக இருப்பது தெரிய வந்தது. அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.