தமிழ்நாடு

தமிழகத்தில் 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு; 12 வயதுக்குட்பட்டவர்கள்

தமிழகத்தில்  12 வயதுக்குட்பட்ட 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில்  12 வயதுக்குட்பட்ட 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 527 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 266 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூரில் அதிகபட்சமாக இன்று ஒரேநாளில் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வயது அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்த பாதிப்பு: 3,550 பேர் (ஆண்கள்: 2,392, பெண்கள்: 1,157, திருநங்கை: 1)

12 வயதுக்குட்பட்டவர்கள்: 190 பேர் (ஆண் குழந்தைகள்: 95, பெண் குழந்தைகள்:95)

13 முதல் 60 வயத்துக்குட்பட்டவர்கள்: 3,047 பேர் (ஆண்கள்: 2,089, பெண்கள்: 957)

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 313 பேர் (ஆண்கள்:208, பெண்கள்:105) 

சென்னையில் பிறந்து 3 நாள்களே ஆன குழந்தைக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT