முகப்பு
தமிழ்நாடு

காரைக்குடி பகுதியை குளிர்வித்த கோடை மழை 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாழக்கிழமை மதியம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது.  

தமிழ்நாடு

காரைக்குடி பகுதியை குளிர்வித்த கோடை மழை 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாழக்கிழமை மதியம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாழக்கிழமை மதியம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது.                

நகரில் கோடை கால வெயில் கொளுத்தி வருகிறது.கடந்த சில இரண்டு தினங்களுக்கு முன்னர் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடும் வெயிலால் நகரில் வெப்பம் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.                   

இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் வானம் மந்த நிலையாகவும், கடும் வெயிலும் என மாறி மாறி இருந்த நிலையில் கருமேகம் திரண்டு மதியம் 2.30 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் பூமியில் லேசான ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ச்சி நிலவுகிறது. 

ஒரு சில பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது. தொடர்ந்து இடி இடிந்த வாறு இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →