முகப்பு
தமிழ்நாடு

மது வாங்க ஆதார் வேண்டாம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

​மது வாங்க ஆதார் எண் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:


மது வாங்க ஆதார் எண் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதியளித்தது. உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் மது வாங்க ஆதார் எண் கட்டாயம் என்பதும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் பலரிடம் ஆதார் அட்டை இல்லாததால், மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுதொடர்பான முறையீடுகள் அனைத்தும் மே 14-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →