ஊழியருக்கு கரோனா; சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனை மூடப்பட்டது
சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது.
சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது.
மருத்துவமனையில் பணிபுரியும் எழுத்தர் ஒருவருக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை உடனடியாக மூடப்பட்ட நிலையில், தற்போது சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மருத்துவமனை இருக்கும் பகுதி 'தடை செய்யப்பட்ட பகுதியாக' அறிவிக்கப்டுள்ளது.