தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது!

DIN

சென்னையில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் குறித்த தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 587 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. தற்போதையை நிலவரப்படி 10,576 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 4,844 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 5,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கரோனாவுக்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT