ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
ஈரானின் தலைநகர் மீது 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு...
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மீது 80 போர் விமானங்கள் மூலம் புதிய அலையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
தெஹ்ரான் மற்றும் மத்திய ஈரானின் ராணுவத் தளங்கள், முக்கிய கட்டமைப்புகள் மீது புதியதாக 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை (மார்ச் 7) அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்தப் புதிய தாக்குதல்கள் குறித்து ஈரான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் நிபந்தனையின்றி சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Israeli military has announced that it has launched a new wave of attacks on Tehran with 80 warplanes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.