விழுப்புரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ. 150 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
விழுப்புரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நலத்திட்ட வழங்கும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நலத்திட்ட வழங்கும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை பதிவாளர் எல். சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் பங்கேற்று, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 25 ஆயிரத்து 456 பயனாளிகளுக்கு, ரூ.150 கோடி மதிப்பிலான பதினொரு வகையான கடனுதவி நலத்திட்டங்களை வழங்கியும், 3 கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினர். அதிகாரிகள் பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.