முகப்பு
தமிழ்நாடு

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
கோப்புப்படம்
பகிர்:

ஈரோடு: மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.          

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

2,505 பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 
மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

குடிமராமத்து திட்டம் மூலம் வெள்ளச் சேதம் இல்லா தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் பாதுகாப்புடன் நடைபெறும்.

மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று கருத்து தெரிவிக்கலாம். மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். தொழிற்கல்விகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →