சென்னை: பாதுகாப்பான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவோம் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தீய சக்திகள் அகன்று, நன்மைகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தீபம் போன்று பிரகாசிக்கவும், தமிழக மக்கள் எல்லா வளங்களையும் பெற்று ஆரோக்கியம், செல்வத்துடன் வாழவும் வாழ்த்துகள். கரோனா பாதிப்புகள் முழுமையாக நீங்கிட வேண்டும். இந்த தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடனும், கவனத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம் என்று தனது செய்தியில் பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.