தீபாவளி: குடியரசுத் தலைவர், பிரதமருக்கு முதல்வர் வாழ்த்து
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததைப் போன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூவருக்கும் தனித்தனியாக மலர்க்கொத்துக்களுடன் தீபாவளி வாழ்த்து கடிதங்களையும் முதல்வர் பழனிசாமி அனுப்பிவைத்துள்ளார்.