ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து இடிந்து விழுந்த வீடு. 
தமிழ்நாடு

ஆரணி புதுக்காமூர் ரோடு பகுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 3 பேர் பலி

ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

DIN


ஆரணி: ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஆரணிப்பாளையம், புதுக்காமூர் தெருவில் வசித்து வரும் சந்திரா என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் இருந்த வீடு முழுவதும் இடித்து விழுந்தது. 

இந்த இடிபாடுகளில் வீட்டில் இருந்த 8 வயது குழந்தை உள்பட 7  பேர் சிக்கிக்கொண்டனர். 

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், சிகிச்சை பலனின்றி  குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT