முகப்பு
தமிழ்நாடு

அமித் ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு

​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
கோப்புப்படம்
பகிர்:


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.

இந்த நிலையில், அரசு விழா முடிவடைந்த நிலையில் அமித் ஷா தங்கியிருக்கும் விடுதியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகின்றனர். கூட்டணி உறுதியான நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →