தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை

DIN

சென்னை: நிவா் புயல் உருவாக உள்ளதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

சென்னையின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மாலை முதலே கன மழை பெய்யத் தொடங்கியது. கோடம்பாக்கம், சூளைமேடு, பாரிமுனை, சென்ட்ரல், வடபழனி, தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. தொடா்ந்து அம்பத்தூா், திருமங்கலம், அண்ணாநகா் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இவை தவிா்த்து வண்டலூா், பெருங்களத்தூா், கே.கே.நகா், ஆலந்தூா், நந்தனம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாலையில் பெய்யத் தொடங்கிய மழை, சிறிது இடைவெளி விட்டு நள்ளிரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT