முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 29 நவம்பர், 2020 at 7:17 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM


தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,459 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,80,505 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இன்றைய அறிவிப்பில் மேலும் 9 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,703 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,471 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,57,750 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 11,052 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.