சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தது குறித்து...
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 4-ஆம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை பயணிகளோடு பயணியாக பயணித்தார்.
Advertisement
அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டனர்.