FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தது குறித்து...

Updated On : 10 ஏப்ரல் 2026, 9:46 am IST
சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின். - டிஎன்எஸ்
பகிர்:

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 4-ஆம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின். - எக்ஸ்
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளோடு பயணியாக பயணணித்த முதல்வர் மு.க. ஸ்டாலின். - எக்ஸ்

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை பயணிகளோடு பயணியாக பயணித்தார்.

Advertisement

Advertisement

அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதனிடயே, சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன்.

மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்... என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Chief Minister M.K. Stalin campaigns for votes while traveling on the Chennai Metro...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments