தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்துக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டதையடுத்து அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் நாளை அறிக்கை வெளியிடப்படலாம்.
இதனிடையே, அவர் 2-ம் கட்ட பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.