தமிழ்நாடு

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

DIN

அதிமுக கட்சி செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள 11 பேர் விவரம்:

அமைச்சர்களும் அதிமுக அமைப்புச் செயலர்களுமான திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார், அமைச்சர்  மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலர் சி.வி.சண்முகம், அமைச்சர் மற்றும் திருவாரூர் மாவட்ட செயலர் ஆர். காமராஜ், அதிமுக அமைப்புச் செயலர்கள் ஜே.சி.டி. பிரபாகர், பி.எச். மனோஜ் பாண்டியன், ப.மோகன்,  தேர்தல் பிரிவு இணைச் செயலர் இரா. கோபாலகிருஷ்ணன்,  சோழவந்தான் எம்எல்ஏ கி. மாணிக்கம்.

அதிமுக ஒருங்கிணப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேரும் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

SCROLL FOR NEXT