தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை 2020 குறித்து ஆய்வு பணியை கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி, அவர் பர்கூர் பேரூராட்சியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும், பர்கூர் பராமரிப்பு மையத்தையும் ஆய்வு செய்கிறார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி அணையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வெள்ள தடுப்பு பணிகளையும், அவர் பார்வையிடுகிறார். 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதியம் 2 மணி அளவில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பி ஜெயச்சந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT