மதுராந்தகத்தில் இடியுடன் கனமழை: மின் வயரில் சிக்கி 9 ஆடுகள் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் இடி தாக்கி 9 ஆடுகள் பலியாகின.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மதியம் திடீரென கருமேகம் சூழ்ந்து, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் மேல்மருவத்தூர், கருங்குழி போன்ற பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், குருபாதமேடு கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான ஆட்டின் மீது இடி தாக்கி, மின் வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதில் 9 ஆடுகள் பலியாகின.