போலி திருமண தகவல் சேவை இணையதளங்கள்: எச்சரிக்கும் காவல்துறை
போலியாக உருவாக்கப்பட்ட திருமண தகவல் மைய இணையதளங்கள் மூலமாக இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலியாக உருவாக்கப்பட்ட திருமண தகவல் மைய இணையதளங்கள் மூலமாக இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமண தகவல்மையங்களின் பெயர்களில் போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, அதில் பெண்களின் விவரங்கள் தரப்படுகின்றன. அதுபோன்ற போலி இணையதளங்களில் திருமண வரன் பார்க்கும் அப்பாவி இளைஞர்களிடம் மோசடி நபர்கள் பெண்கள் போல் பழகி பணம் பறிக்கும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தற்போது இணையத்தில் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு ஈடாக, போலியான இணையதளங்களும் அதிகரித்துள்ளன. எனவே, பயனாளர்கள்தான், தாம் தொடர்பு கொள்ளும் இணையதளம் உண்மையானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.