முகப்பு
தமிழ்நாடு

அம்பத்தூர் உள்பட 6 மண்டலங்களில் மீண்டும் ஆயிரத்தை எட்டிய கரோனா நோயாளிகள்

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 13,446 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் 6 மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
அம்பத்தூர் உள்பட 6 மண்டலங்களில் மீண்டும் ஆயிரத்தை எட்டிய கரோனா நோயாளிகள்
பகிர்:


சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 13,446 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் 6 மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிவிட்டது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,288 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 79,424- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 3,373 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தை அண்மையில் எட்டியது.

வெள்ளிக்கிழமை மேலும் 1,288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 79,424-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 62,605 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,446 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 3,373- ஆக அதிகரித்துள்ளது.

அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் 1,300 என்ற அளவிலும், திருவிக நகரில் 1,200 என்ற அளவிலும், அம்பத்தூர், அடையாறில் 1000-க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் உள்ளனர். கடந்த மாதம் இறுதி வரை கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது சென்னைவாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மண்டலவாரியாக கரோனா நிலவரம்..

முழு கட்டுரையைப் படிக்க →