தமிழ்நாடு

விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டப்பணி துவக்கம்

DIN

மாதவரம் அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டப்பணி துவங்கப்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் ஊராட்சி கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதன் தொடர்பாக மாதவரம் தொகுதி எம்எல்ஏ ரூபாய் 18.75 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்திற்கான பணி துவக்க விழா வெள்ளிக்கிழமை ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன்  தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி கழக செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில், மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்ட பணியை தொடங்கி வைத்தார். இதில் விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT