தமிழ்நாடு

கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு கட்டாயம்: நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்

DIN


சென்னை: கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களை முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி பருவத் தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்துவதை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT