தமிழ்நாடு

திங்கள்கிழமை ஒரு நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்.பி.சரண்

DIN

எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் வருகிற திங்கள்கிழமை ஒரு நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து எஸ்.பி.சரண் கூறியதாவது:

அப்பாவின் உடல்நிலை 4-வது நாளாக சீராக உள்ளது. திங்கள்கிழமை அவரது உடல்நிலை குறித்து நல்ல செய்தியை நாம் எதிர்பார்க்கலாம். உங்கள் அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளால் அவர் குணமடைந்து வருகிறார் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT