டெங்கு பணியாளர் பலி 
தமிழ்நாடு

ஆரணி அருகே சாலை விபத்து: டெங்கு பணியாளர் பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சாலை விபத்தில் பேரூராட்சி சேர்ந்த டெங்கு பணியாளர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சாலை விபத்தில் பேரூராட்சி சேர்ந்த டெங்கு பணியாளர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரணி பேரூராட்சியில் டெங்கு பணியாளராக வள்ளுவர் மேடு சேர்ந்த பரிமளா கணவர் பெயர் கார்த்தி என்பவர் வேலை செய்து வருகிறார்கள்.  திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் காலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து காலை உணவருந்தி விட்டு மறுபடியும் அலுவலகம் சென்றுள்ளார். 

அப்போது செல்லும் வழியில் அரசு மதுபான கடை அருகே பெரியபாளையம் கும்முடிபூண்டிசெல்லும் சாலையில் ஆரணி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஆரணி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி ஏற்றுக்கொண்டுவந்த மினி லாரி அவர் மீது பின்னால் மோதியதில் பலத்த காயமடைந்த  தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் பரிமளாவை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.  பரிமளா மீது மோதிய மினி வேன் நிலை தடுமாறி சாலை அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காவல்துறை ஓட்டுனரை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT