தமிழ்நாடு

5 நாள்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு விடுமுறை: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

கோபி: செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 19 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், கண்களுக்கு ஓய்வு அளிப்பதற்காகவும் செப்டம்பர் 21 முதல் 25ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் இதைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு என்பது கரோனா தொற்று குறைந்த பின்னர்தான் முடிவெடுக்கப்படும். பகுதி நேர நூலகங்களை முழு நேர நூலகங்களாக மாற்றம் செய்வதற்காக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT