தமிழ்நாடு

மின் விளக்குகள் இல்லா பாளையம்பட்டி ராமசாமிபுரம் குடியிருப்பு

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டி கிராமத்தின் ராமசாமிபுரம் குடியிருப்பு சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாளையம்பட்டி ராமசாமிபுரம் குடியிருப்பு மற்றும் அதையடுத்துள்ள மாங்குளம் கண்மாய்வழியாக கட்டங்குடி செல்லும் சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் ராமசாபுரம் குடியிருப்புப் பகுதியில் அதிக இடைவெளி விட்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இரவில் அதிக இருள் சூழ்ந்து விடுகிறது. இவ்விருட்டைப் பயன்படுத்தி சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் குடிகாரர்களும் இந்த குடியிருப்பு அருகே மது அருந்திவிட்டுத் தகராறு செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாளையம்பட்டியிலிருந்து இச்சாலை வழியாக ராமசாமிபுரம் குடியிருப்பிற்குள் செல்லவே பாதுகாப்பற்ற சூழல் காரணமாக பெண்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் அச்சத்துடனே செல்ல நேர்கிறது. 

எனவே பாளையம்பட்டி ராமசாமிபுரம் குடியிருப்பு மற்றும்  மாங்குளம் கண்மாய் வழியாகக் கட்டங்குடி செல்லும் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்து இருள் சூழலைத்தடுக்க அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT