தமிழ்நாடு

விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு

DIN

மோட்டாா் வாகன விபத்தில் பலியான கட்டுமான மேற்பாா்வையாளரின் குடும்பத்தினருக்கு, ரூ.12.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லோகநாதன். கட்டட மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு, பழவெளியில் இருந்து செங்கல்பட்டுக்கு, மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த காா் மோதியதில், லோகநாதன் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அவரது மனைவி சின்னப்பொண்ணு மற்றும் குடும்பத்தினா், ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீா்ப்பாயத்தில், வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.ரேவதி, மனுதாரா் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.12 லட்சத்து 64 ஆயிரம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT