தமிழ்நாடு

வருகைப் பதிவு செயலியை முதல் முறையாகப் பயன்படுத்திய மக்களவை உறுப்பினர்கள்

ANI


புது தில்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், வருகைப் பதிவுக்கான செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்தி மக்களவை உறுப்பினர்கள் தங்களது வருகையைப் பதிவு செய்தனர்.

மக்களவைக்கு இன்று காலை வருகை வந்த மக்களவை உறுப்பினர்கள், தேசிய தகவல் மையம் வடிவமைத்த வருகைப் பதிவு செயலியை இன்று முதல் முறையாகப் பயன்படுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், வருகைப் பதிவேட்டை தொட்டு அதில் கையெழுத்திடுவதன் மூலம் கரோனா பரவும் அபாயம் இருப்பதால், செல்லிடப்பேசி மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மக்களவைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரும், செல்லிடப்பேசி செயலி மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT