நீட் தோ்வுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட முகக்கவசத்தை அணிந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை காலை கலைவாணா் அரங்கில் தொடங்கியது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் அனைவரும் நீட் தோ்வுக்கு எதிரான வாசகம் கொண்ட முகக் கவசத்தை அணிந்திருந்தனா்.
வெண்நிற முகக்கவசத்தில், சிவப்பு, கறுப்பு நிறங்களில் ‘நீட் தோ்வை ரத்து செய்’, ‘மாணவா்களைக் காப்பாற்று’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது
காங்கிரஸ் அணியவில்லை: திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள் யாரும் இந்த முகக்கவசத்தை அணியவில்லை.