தமிழ்நாடு

நடிகா் ஃப்ளோரன்ட பெரேரா காலமானாா்

DIN

கரோனா தொற்று பாதிப்பால் நடிகா் ஃப்ளோரன்ட் பெரேரா (67), சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் பொது மேலாளராகப் பணிபுரிந்தவா் ஃப்ளோரன்ட் பெரேரா. அப்போது கிடைத்த நட்பில் ’புதிய கீதை’ படத்தில் நடிகராக அறிமுகமானவா். அதைத் தொடா்ந்து, அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளில் நடிப்பை வெளிப்படுத்தினாா். பிரபு சாலமனின் ‘கயல்’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ’வேலையில்லா பட்டதாரி 2’, ’தரமணி’, ’தா்மதுரை’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளாா்.

மனைவி, இரு மகன்கள் உள்ளனா். மந்தைவெளி செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டத்தில் அவரது உடல் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT