தமிழ்நாடு

அண்ணாசாலையில் புதுப்பொலிவுடன் அண்ணா சுரங்கப்பாதை திறப்பு

DIN


சென்னை அண்ணா சாலையில் அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பழைய அண்ணா சுரங்கப்பாதை நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மிகப்பெரிய சுரங்கப்பாதையில் ஒன்றான பழைய அண்ணா சுரங்கப்பாதை அண்ணா சாலையில் அமைந்துள்ளது.

அந்த சுரங்கப்பாதை புதுப்பிக்கப்பட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுத் தளத்துக்கு சுரங்கப்பாதை நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. வாலாஜா சாலை, எல்லிஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணா சாலை ஆகிய இடங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம், சாலையை எளிதில் கடக்கலாம்.

காதிபவன் மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றையும் இந்த அண்ணா சுரங்கப்பாதை இணைக்கிறது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பயணிகளை வழிநடத்த அண்ணா சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் மற்றும் நடைபாதைகளிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT