பெரியாரின் 142 ஆவது பிறந்த நாள்: முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மரியாதை
பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்படி பழனிசாமி அவரது மரியாதை உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்படி பழனிசாமி அவரது மரியாதை உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அவரைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.