புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
புதுவையில் நேற்று புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM
புதுவையில் நேற்று புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று 5,344 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 490 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 21 ஆயிரத்து 913 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 16,715 பேர் குணமடைந்துள்ளனர். 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
தினசரி பரிசோதனை அளவை இரு மடங்கு அதிகரித்துள்ளனர், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.