தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நல்லமுறையில் பெய்ததை அடுத்து அமராவதி அணை 3 முறை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அமராவதி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணையின் மேல்பகுதியில் அமைந்துள்ள தானியங்கி பொத்தானை அழுத்தி கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையை திறந்து வைத்தார்.

இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளிலுள்ள 51 ஆயிரம் ஏக்கர்கள் பயன் பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT