அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 
தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நல்லமுறையில் பெய்ததை அடுத்து அமராவதி அணை 3 முறை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அமராவதி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணையின் மேல்பகுதியில் அமைந்துள்ள தானியங்கி பொத்தானை அழுத்தி கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையை திறந்து வைத்தார்.

இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளிலுள்ள 51 ஆயிரம் ஏக்கர்கள் பயன் பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT