முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல்லில் எஸ்.பி.பி திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
நாமக்கல் மணிக்கூண்டு அருகில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய தெலுங்கு சம்மேளனத்தினர்.
பகிர்:



நாமக்கல்: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் எஸ்.பி.பி. உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட விடுதலை களம் அமைப்பின் தலைவர் நாகராஜன் கலந்து கொண்டார். 

மேலும் பாஜக நிர்வாகிகள் மனோகரன், இளங்கோவன், கலாசார ஆர்வலர் ஆர்.பிரணவ் குமார் மற்றும் இசைக்கலைஞர்கள்,  மேடைப் பாடகர்கள் பலர் கலந்து கொண்டு எஸ்.பி.பி-யின் உருவப்படத்துக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய தெலுங்கு சம்மேளனத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →