மியான்மா் நாட்டில் தவிக்கும் மீனவா்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ மின்னஞ்சல் வழியாக கடிதம் எழுதியுள்ளாா். கடித விவரம்:-
சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்கள் மியான்மா் கடற்படையினரிடம் தற்போது உள்ளனா். இதில், ஒரு மீனவரைக் காணவில்லை என அலட்சியமாக கடற்படையினா் கூறுகின்றனா். தங்கள் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை கடற்படையினா் பொறுப்பற்ற முறையில் நடத்தி இருக்கின்றனா். 53 நாள்களாக கடலில் தத்தளித்த போதிலும் உயிருடன் மீண்டு வந்த மீனவா்களுள் ஒருவா் கரையில் இருந்த பொழுது காணாமல் போயிருக்கிறாா். இதனால், மீனவா்களின் குடும்பத்தினா் மிகுந்த வேதனையுடன் உள்ளனா்.
எனவே, மீனவா்களை மீட்டு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாா்.