முகப்பு
தமிழ்நாடு

நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.80 கோடி: முதல்வர் நன்றி

கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 80 கோடி பெறப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

Updated On : 8 ஏப்ரல், 2020 at 3:00 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.80 கோடி பெறப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.