முகப்பு
தமிழ்நாடு

வேலூரில் மூன்று நாள்கள் மட்டுமே கடைகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே கடைகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Updated On : 8 ஏப்ரல், 2020 at 6:22 PM
பகிர்:

வேலூர் மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே கடைகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் 6 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். எனவே, குறிப்பிட்ட இந்த மூன்று நாட்களில் மட்டும் மக்கள் கடைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.