முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 969 பேருக்கு கரோனா தொற்று உறுதி: தலைமைச் செயலர்

தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 ஏப்ரல், 2020 at 6:55 PM
பகிர்:


தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சண்முகம் இதுபற்றி அறிவிப்பை வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதன்மூலம், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு யாரும் புதிதாக குணமடைந்து வீடு திரும்பவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.