விவசாயிகளுக்கு மேலும் ஒருமாத காலம் சலுகை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு
விவசாய விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்புக் கிடங்குக்கான வாடகைக் கட்டணத்தை மேலும் ஒரு மாதத்திற்கு விவசாயிகள் செலுத்தத் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விவசாய விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு வாடகைக் கட்டணத்தை விவசாயிகள் மேலும் ஒரு மாதத்திற்கு செலுத்தத் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா பரவல் எதிரொலியாக, விளைப்பொருட்களின் சேமிப்புக் கிடங்குக்கு விவசாயிகள் செலுத்தும் வாடகைக் கட்டணம் ஏப்ரல் மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும், ஒரு மாத காலம் விவசாயிகள் கிடங்கு வாடகைக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.