முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை உணவு இலவசம்

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

Updated On : 4 மே, 2020 at 4:28 PM
பகிர்:

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

கரோனா எதிரொலியாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவருந்தும்பொருட்டு, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. 

நேற்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் பல இடங்களில் அம்மா உணவகங்களில் பணம் கொடுத்து உணவு பெறுவதாக தகவல் வெளியானது. 

Advertisement

இதையடுத்து, ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள மே 17 வரை சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக ஆகும் செலவை தன்னார்வர்லர்கள் ஏற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.