சென்னையில் கரோனா பரவல்: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
சென்னையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரிப்பன் மாளிகையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், காவல் ஆணையர் விஸ்வநாதன், டிஜிபி திரிபாதி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, சிஎம்டிஏ அதிகாரி/செயலர் கார்த்திகேயன், மண்டல வாரியாக அதிகாரிகள் கலந்து கொண்டுளள்னர்.
சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,724-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement