சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,028 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,028 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,028 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மேலும் 1,367 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பாதிப்பாக இன்றும் கோவையே உள்ளது. கோவையில் 468 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 343 பேருக்கும், சேலத்தில் 337 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக: இங்கே க்ளிக் செய்யவும்..