சிறப்பு பேருந்து நிலையங்களுக்குச் செல்ல 230 இணைப்புப் பேருந்துகள்
பேரவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 230 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பேரவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 230 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கே,.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய சிறப்பு பேருந்து நிலையங்களிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு, கோயம்பேடு பேருந்து நிலயைத்திலிருந்து செல்ல வசதியாக ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் 230 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.
Advertisement