தமிழ்நாடு

உடுமலையில் வாக்களித்தார் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 

DIN

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், அதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 11.30 மணிக்கு வாக்களித்தார். 

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உடுமலை நகரில் (5-ஆவது வார்டு) தாராபுரம் சாலையில் உள்ள நகராட்சிப் பள்ளி வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். இவருடன் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் வாக்களித்தனர். 

அப்போது அவர் கூறியது: 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் அமைச்சராகப் பதவி வகித்த இந்த தொகுதிக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சிப் பணிகளைச் செய்து முடித்துள்ளேன். மீண்டும் மக்கள் என்னை இந்த தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தால் தமிழகத்திலேயே முதல் நிலை சட்டப்பேரவைத் தொகுதியாக இந்த தொகுதியை மாற்றிக் காட்டுவேன் என உறுதி அளிக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT